Sunday, April 25, 2010

தூரத்தில் கேட்கின்றது ஒரு.........

மாமல்லக் கடற்கரை
மாலை மணி ஐந்து
நான்-அவள்......
.
.
.
அருகில் வந்த
அழகு மழலையின்
பந்துக்குப் பங்குக்கேட்டு
அடம்பிடித்து விளையாடினாள்
என்னவள்-நான்
அவளை இரசித்தபடி....
.
.
.
வீசும் காற்றில்
என்
கன்னந்தொட்டு
கையில் இறங்கியது - ஒரு
கசங்கியக் காகிதம்-சில
வரிகளைச் சுமந்து.....
.
.
படிக்கின்றேன்..

"உன் மீதான
என் அன்பினை
என்னால் செய்து
உன்னிடம் தந்தேன்
நிமிட வயது சிசுவை-அதன்
தாயிடம் தருவது போல்...

நீ.....
சூறைக்காற்றில்
நொடிந்து உடையும்
ஒரு கருப்புக் குடையைப்
பிடிப்பதுப்போல்
பிடித்தாய்-விட்டுவிட்டாய்....

மகிழ்ச்சியடி பெண்ணே...

இதோ....
என் முன்னால்
பல நூறுக் கருப்புக்குடைகள்
மிதக்கின்றன கிழிந்தபடி
இக்கடலில்....
.
.
அதோ....அதோ....
எனது குடை....
உன்னை நேசித்ததன்றி
ஒரு பாவமும் செய்யாத
எனது குடை....
.
.
அழுகின்றதே எனது குடை.....
இறைவா....
என்னவென்று ஆறுதல் சொல்ல...- அன்றியும்
நான் அதனிடம்
செல்லவேண்டும்-
செல்வேன்......"
.
.
.
.
'என்ன அது ?'
என்றாள் என்னவள்
அருகில் அமர்ந்து...

'வெற்றுக்காகிதம்'
என்றுச் சொல்லி
விட்டுவிட்டேன்,காற்றில்....
.
.
.
தோளில் சாய்ந்துகொள்கிறாள்
என்னவள்.....
கடலினை மேய்ந்தபடி
என் கண்கள்....
.
.
.
.
தூரத்தில் கேட்கின்றது
ஒரு
அழுகுரல்.......