அரசு இடைநிலைப்பள்ளி
வெளிப்புற வகுப்பு
மாலை மணி 4.30
'ஒரு கனசதுரத்தின் பரப்பு காண......
டேய் முருகா...
ஒழுங்கா முட்டிப் போடுறியா-இல்ல
ஒன் முதுகுல ரெண்டு போடவா'...
'வேணா டீச்சர்.....
சாமி...-இந்த
சுமதி டீச்சர் வாயி-இன்னிக்குமா
சூத்திரம் போடணும்...
நாளைக்கு என்ன நாளு...
எல்லாரும் புதுத்துணி வாங்கிட்டாங்க...
எவ்ளோ பெரிய வெடில்லாம் வாங்கிட்டாங்க...
எனக்கு இன்னும்
எதுவும் இல்ல...
ஆத்தாகிட்டக் கேட்டா
அடிக்கவருது ஆத்தா...
அப்பாகிட்டக் கேட்டா
குடிச்சுட்டுவருது அப்பா'...
'டேய் முருகா- ரெண்டு போடவா'...
'வேணா டீச்சர்...
சாமி...-இந்த
வீட்டு மணிய
வெரசா அடிக்கச்சொல்லு...
கடத்தெருக்குப் போலாமுனு
காலைலயே சொல்லுச்சு ஆத்தா...
வெரசாப் போவணும்..
வெரசாப் போவணும்...
புதுத்துணி வாங்கணும்...
புல்லட்டு வெடி வாங்கணும்...
சங்குச்சக்கரம்,புசுவானம்...-ஆத்தாடி
எவ்ளோ வாங்கணும்'...
'டேய் முருகா- ரெண்டு போடவா'...
'வேணா டீச்சர்...
சாமி...-இந்த
வீட்டு மணிய
வெரசா அடி...
முக்கோணச் சூத்திரம்
சொல்ல மறந்து
முட்டிப் போடுறேன்
முக்காமணி நேரமா...
என் நெனப்பெல்லாம் கடத்தெருல...
என்கிட்டப்போயி
வட்டஞ் சதுரம்னா எப்புடில...
எம்மா நேரமா காத்துட்டுருக்கேன்- இந்த
வீட்டு மணிய எவனாச்சும் அடிங்கள...
'டேய் முருகா- ரெண்டு போடவா'
'வேணா டீச்சர்'....
Friday, June 25, 2010
Subscribe to:
Posts (Atom)
