Sunday, February 13, 2011

கவிதையா? இல்ல..

கவிதையா? என்னையவா?
ம்ம்… காதல் கவிதை எழுதலாமா?
.
.

‘பெண்ணே…
20,000 rpm-ல் உன்னைச் சுற்றி வருகிறேன்…
கொஞ்சம் கண்டுகொள்ளடி….

SDS அல்ல என் இதயம்…
துணிந்துத் தொட்டுப் பாரடி….

உன் EDTA மனதைக்
கரைக்க
என் காதல் வருகிறது பார்
NaOH pellet-களாய்….

Overnight incubation-ல்
Bacteria வை வளர்ப்பாய்…
என் காதலை வளர்க்கமாட்டாயோ?...

MilliQ சுத்தமடி
என் மனம்… ஏற்றுக்கொள்…

Restriction செய்ய உன் அப்பா-அம்மா வந்தாலும் சரி…
Digestion செய்ய உன் அண்ணன்-தம்பி வந்தாலும் சரி…
Ligase-இன் சக்கரவர்த்தி நான்…
இணைத்துக் கொள்வேன் உன்னை…

நீ விட்டுச் சென்ற
Microgram புன்னகையை
PCR போட்டு வைத்துள்ளேன்…
சரி என்று சொல்லடி…
Family construct பண்ணலாம்’…

அப்பாடா…..எழுதியாச்சு….
மறுபடியும் படிப்போமா?
.
.

கடவுளே …
இது
காதல் கவிதையா?
Maniatis lab manual ஆ?

ஒளிந்து பார்...

அடியே…
மலரோடு மலராய்
ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சியா காட்டுகிறாய்?
முடிந்தால்
Pubmed-ல் ஒளிந்துபாரடி….
உன்னை
பத்தே நொடியில்
தூக்குகிறேன்… :P