Sunday, June 10, 2012


நீ
தந்துச் சென்ற நினைவுகள்,
தங்கிச் சென்றக்கனவுகள்,
மறந்துச் சென்ற மௌனங்கள்,
விட்டுச் சென்றப்பொழுதுகள்,
அனைற்றையும் பொறுக்கி
சுள்ளிகளாய் வைத்துள்ளேன்.
கூடு செய்வாயோ?
கொள்ளியாய் எரிப்பாயோ?
உன் தாய்மை
இறுதி செய்யட்டும்.

Monday, April 30, 2012

ஆராய்ச்சியோ அடுப்படியோ
செய்தத்தவறைத் திரும்பச்செய்வதில்
உடன்பாடில்லை எனக்கு.
நேற்று சாம்பார்.
இன்று புளிக்குழம்பு!!! :D

Saturday, April 14, 2012

மெதுவாய்த்தான் உச்சரித்தேன்
அவள் பெயரை...
புதுக்கவிதையா..மரபுக்கவிதையா என
பட்டிமன்றத்துக்கு கிளம்பிவிட்டார்
பாப்பையா!!!

அருமைப் பெரியோர்களே!!! :P

Saturday, March 31, 2012

ஒரு ரகசியம்?
சொல்லு.
கிட்ட வா..
ம்.
இன்னும்..
ம்.
இன்னும் கிட்ட வாடா!!
இன்னுமா ?
ம் .
ம். சொல்லு.
2012 ல உலகம் அழிஞ்சுடுமாம்.
அடச்ச...மொக்க..
(மனதில்..'இந்த நெருக்கம் போதுமடி... இனி எது அழிஞ்சா என்ன.. அழியலேன்னா என்ன? :P' )

Sunday, February 5, 2012

வரவர
என் கனவில்
உன் பெயர்
மெதுவாய் அடிபடுகிறதாம்.
அம்மா சொல்கிறாள்.
.
.
அச்சச்சோ!அடிபடுகிறதா?
முத்தமிடுடா...ஆறிவிடும்!!
.
.
அடடா...
இனி
நன்றாய் அடிபடும்!!!
சரிதான்...
மீனென்று பார்த்தால்
நீ தூண்டிலா?

(தலைவன் தலைவியின் கண்களிடம் கேட்டது)
காதல் அரும்பியத் தருணம் அது.
அப்போதெல்லாம்
அவள் அழைப்பு வரும்போது
வீட்டுமணிச் சத்தம் கேட்டு
துள்ளி ஓடும் பள்ளி மாணவன் போல்
ஓட்டமாய் ஓடுவேன்
அவளிடம்.
இப்போதும் ஓடுகிறேன்.
இன்னும் வேகமாய்...
எதிர்த் திசையில்!!!