பேருந்து நிலையம்
பிதுங்கிக் கொண்டிருந்தது...
எனக்கானப் பேருந்துக்காக
விழி பிதுங்கியபடிக்
காற்றுக் கொண்டிருந்தேன்
நான்,கையில் பெட்டியுடன்...
அந்த நெரிசலிலும்
விண்மீன் சல்லடையில்
வடிகட்டிய முழுமதியாய்த்
தெரிகின்றாள் அவள்...
ஆகா,
இவளும்
பேருந்திற்குத்தானா?
இறைவா..
உன் கருணையே கருணை...
அடடா...
என்ன அழகு...?
இவள் எப்படி
தனியாய் நிற்கிறாள்?
என்னை வேறு
கவிஞனாக்கிக் கொண்டு...
ஆகா...
யாரை அழைக்கிறாள்
அலைபேசியில்?
மணமானதுபோல்
தெரியவில்லையே...
அப்பாவையா? அண்ணனையா?
நல்லவர்களே...
வந்துவிடாதீர்கள்...
தாவிக்குதிக்கும்
என்
மனக்குரங்குக்கு
'ஆப்பு'வைத்து விடாதீர்கள்...
காற்றில்
அவள் கண்களை
முத்தமிடும்
கூந்தல்...
ஒரு கையால்
அக்கூந்தலை
சரி செய்கிறாள்...
மறுகையால்
கழுத்தணியை
இதழில்
வைத்துக்கொள்கிறாள்...
நகம் கடிக்கின்றாள்..
அவ்வப்போது
என்னையும் பார்க்கின்றாள்...
அய்யோ...அழகே...
அருகில் வந்து
என்
கரங்களைப் பற்றிக்கொள்ளடி...
கவிதைவலிப் பற்றிக்'கொல்'கிறது...
பேருந்து வந்துவிட்டது...
முண்டியடிக்கும் கூட்டத்தில்
நான்
நொண்டியடிக்க
என் கண்கள்
அவளைத் தேடி
வலை வீச...
ஆகா...
அருகில் நிற்பது
அவளேதான்..
அழகேதான்...
இறைவா...
கூரையைப் பிய்த்துக்
கொடுத்துவிட்டாயே...
நெரிசலில்
என்னைப்
பனிக்கட்டியாய்
அவள் இடிக்க,
என்னை மறந்து
விழி மூடிய நொடிப் பொழுதில்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவளையும் காணவில்லை...
என்
பெட்டியையும் காணவில்லை....
அடிப்பாவி..... :(
Sunday, July 25, 2010
Thursday, July 8, 2010
சின்னதாய் ஒரு புரிதல்...
சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...
புரிதல் என்னவெனில்,
இயற்கை இட்டுவைத்த
காலப் புள்ளிகள்
ஒருபோதும் 'முற்று' பெறா...-மாறாய்
அவையாவும் 'இயக்கப் புள்ளிகள்'....
ஒருகால் அவை 'முற்று' பெறின்
இயக்கம் 'முற்று' பெறும்.
இயக்கம் 'முற்று' பெறின்
இயற்கை ஏது?-ஆயினும்
இங்கே
எனக்கென்று 'புள்ளி'
எதுவும் உண்டா?-உண்டு...
உயிர்களனைத்திற்கும்
ஒரே புள்ளி-'தொடர்ச்சிப்புள்ளி'
காலம் கணித்த
எல்லை வரை
நாம்
தொடர்ச்சிப்புள்ளிகளாய்த்
'தொடரவே' வேண்டும்...
பின்தொடர்வது 'இயற்கை'...
அதிடுவதே நமக்கு 'முற்று'...
ஆம்...
புரிதல் புலப்படுகின்றது
நன்றாய்...
இந்நாட்களில்
நான் வைத்துக்கொள்வது
தொடர்ச்சிப்புள்ளியே....
அன்பு,நட்பு,
கல்வி,காதல்,
உழைப்பு,உயர்வு,
மனிதம்,மாண்புவென
அனைத்திற்கும்...அனைத்திற்கும்
நான்
வைப்பது 'தொடர்ச்சிப்புள்ளியே'...
மீண்டும் மீண்டும்
வைத்துக் கொள்கின்றேன்...
மழை,வெயில்,
இரவு,பகல்,
நிமிடம்,நேரம் என
அனைத்துமே
'தொடர்ச்சிப் புள்ளிகளாய்'...
எதற்காக
'முற்றுப்புள்ளி'?...
சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...
சின்னதாய் ஒரு புரிதல்...
புரிதல் என்னவெனில்,
இயற்கை இட்டுவைத்த
காலப் புள்ளிகள்
ஒருபோதும் 'முற்று' பெறா...-மாறாய்
அவையாவும் 'இயக்கப் புள்ளிகள்'....
ஒருகால் அவை 'முற்று' பெறின்
இயக்கம் 'முற்று' பெறும்.
இயக்கம் 'முற்று' பெறின்
இயற்கை ஏது?-ஆயினும்
இங்கே
எனக்கென்று 'புள்ளி'
எதுவும் உண்டா?-உண்டு...
உயிர்களனைத்திற்கும்
ஒரே புள்ளி-'தொடர்ச்சிப்புள்ளி'
காலம் கணித்த
எல்லை வரை
நாம்
தொடர்ச்சிப்புள்ளிகளாய்த்
'தொடரவே' வேண்டும்...
பின்தொடர்வது 'இயற்கை'...
அதிடுவதே நமக்கு 'முற்று'...
ஆம்...
புரிதல் புலப்படுகின்றது
நன்றாய்...
இந்நாட்களில்
நான் வைத்துக்கொள்வது
தொடர்ச்சிப்புள்ளியே....
அன்பு,நட்பு,
கல்வி,காதல்,
உழைப்பு,உயர்வு,
மனிதம்,மாண்புவென
அனைத்திற்கும்...அனைத்திற்கும்
நான்
வைப்பது 'தொடர்ச்சிப்புள்ளியே'...
மீண்டும் மீண்டும்
வைத்துக் கொள்கின்றேன்...
மழை,வெயில்,
இரவு,பகல்,
நிமிடம்,நேரம் என
அனைத்துமே
'தொடர்ச்சிப் புள்ளிகளாய்'...
எதற்காக
'முற்றுப்புள்ளி'?...
சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...
Friday, July 2, 2010
நீ பிறந்த நாளில்..
என் தங்கை..
பாடாய் என்னைப் படுத்த-என்
பெற்றோர் தந்த
ஒரு
பூனைக்குட்டி...-இன்று
வளர்ந்தக் குட்டி...
நாளை அவள் பிறந்தநாள்...
வேலைக்கு விடுப்புக் கூறி
துணிக்கடையில்
இன்று நான்...
சென்ற வருடம்
நான்
சேலை வாங்கித்தர
அதை அவள்
கட்டச் செய்ய
என் அம்மா
பட்ட பாடு
நினைவிலிருப்பதால்
அவள்
பிசாசாய் விரும்பும்
கடல்நீல நிறத்தில்
சுரிதார்
ஒன்று வாங்க...
அப்பாடா...
கிடைத்துவிட்டது...
இதையவள் உடுத்தினால்
பல மலர்களுக்கு
இனி
'பந்த்' தான்...
வேறென்ன...
.
.
ஆ..
மல்லிகைப்பூ...
அதை
அம்மாவையே வாங்கிச்
சூடச்சொல்வாள்...
.
.
அப்புறம்..
கேசரி...
அதுவும்
அம்மாதான்...
.
.
வேற...
.
.
ஆ...
கார்நேட்டோ ஐஸ்கிரீம்..
அதை
அப்பாவைத்தான்
வாங்கச் சொல்வாள்...-அவர்
மடியில்தான்
சாப்பிடச் செய்வாள்...
.
.
.
வீட்டிற்கு
வந்துவிட்டேன்...
.
.
சாய்நாற்காலியில்
சாய்ந்தபடி
அப்பா...
.
.
உள்ளிருந்து வருகிறது
அம்மாவின் குரல்...
.
.
'சிவா..
வந்துட்டியாடா..
இங்க வந்து
அவ
'போட்டோ'வ எடுத்துக்குடுடா..
தொடச்சுப் பொட்டு வைக்கணும்'...
.
.
.
.
பாடாய் என்னைப் படுத்த-என்
பெற்றோர் தந்த
ஒரு
பூனைக்குட்டி...-இன்று
வளர்ந்தக் குட்டி...
நாளை அவள் பிறந்தநாள்...
வேலைக்கு விடுப்புக் கூறி
துணிக்கடையில்
இன்று நான்...
சென்ற வருடம்
நான்
சேலை வாங்கித்தர
அதை அவள்
கட்டச் செய்ய
என் அம்மா
பட்ட பாடு
நினைவிலிருப்பதால்
அவள்
பிசாசாய் விரும்பும்
கடல்நீல நிறத்தில்
சுரிதார்
ஒன்று வாங்க...
அப்பாடா...
கிடைத்துவிட்டது...
இதையவள் உடுத்தினால்
பல மலர்களுக்கு
இனி
'பந்த்' தான்...
வேறென்ன...
.
.
ஆ..
மல்லிகைப்பூ...
அதை
அம்மாவையே வாங்கிச்
சூடச்சொல்வாள்...
.
.
அப்புறம்..
கேசரி...
அதுவும்
அம்மாதான்...
.
.
வேற...
.
.
ஆ...
கார்நேட்டோ ஐஸ்கிரீம்..
அதை
அப்பாவைத்தான்
வாங்கச் சொல்வாள்...-அவர்
மடியில்தான்
சாப்பிடச் செய்வாள்...
.
.
.
வீட்டிற்கு
வந்துவிட்டேன்...
.
.
சாய்நாற்காலியில்
சாய்ந்தபடி
அப்பா...
.
.
உள்ளிருந்து வருகிறது
அம்மாவின் குரல்...
.
.
'சிவா..
வந்துட்டியாடா..
இங்க வந்து
அவ
'போட்டோ'வ எடுத்துக்குடுடா..
தொடச்சுப் பொட்டு வைக்கணும்'...
.
.
.
.
Subscribe to:
Posts (Atom)
