Friday, May 7, 2010

வாப்பா வாப்பா

வெகுநாள் பார்வைப் பழக்கம்-இன்று
பழகிப் பார்ப்பது என்றெண்ணி
அவளருகில் சென்றேன்..

அவளும்
"வாப்பா வாப்பா" என்றாள்..

அடடா...
இதென்ன...
ஒரு மல்லிகைக் காடு
சில சென்டிமீட்டர் திறந்து அழைக்கின்றதே..
ஈரடிகள் மேலும் வைக்கின்றேன்..
அவள் இதழ்கள்
இன்னமும் வேகமாய்
"வாப்பா வாப்பா" ...

இனி ஒரு தடையில்லையென
மின்னலாய் விரைந்து
அவளருகில் சென்றால்...
.
.
.
.
அருகில் நின்றது
அவள் "வாப்பா".... :(

No comments:

Post a Comment