மனிதன்
மனிதம்
பொய்.
இதயத்தின் ஆழத்தில்
அலறல் அரவங்கள்.
கண்களில் குருதி
அருவிபோல்.
சடலங்களைக் குவிப்பதில்
புனிதம் என்னக் கண்டீர்?
அணையுடைத்த வெள்ளமாய்
அழுகிறேன்.
ஒரு
மூலையின் ஓரமாய்
பைத்தியமாய் ஒன்றுகிறேன்.
மொட்டுக்களைப் பொசுக்கும்
உங்களைக்
கொன்றுபோடவே
விரும்புகிறேன்.
போதும்
இம்மண்ணில்
உங்கள்
வேதம்
நியாயம்
மட்டை
மண்ணாங்கட்டி.
உயிர்தவிர
ஒன்றுமேயில்லை அவர்களிடம்.
விட்டுவிடுங்கள்.
ஒரு
மூலையின் ஓரமாய்
பைத்தியமாய் ஒன்றுகிறேன்.
மொட்டுக்களைப் பொசுக்கும்
உங்களைக்
கொன்றுபோடவே
விரும்புகிறேன்.
Sunday, December 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment