Tuesday, November 10, 2009

பைந்தமிழோ நீ..........

பைந்தமிழோ நீ..........பச்சைத்தமிழோ நீ.......
இலக்கியம் சொல்லா......இலக்கணக்குறிப்பா நீ.......
உன் புன்னகை....
அது இயல்பு நவிற்சியடி....
உன் விழிகள்...
அது தற்குறிப்பேற்றமடி...
சிமிட்டியபடியே....
வே
ண்டாம் வந்து விழாதே என்கிறதே-இந்தப் படுகுழியில்
வந்து விழாதே என்கிறதே....

உன் வெப்பப்பார்வையால்
என் தாகம் பெருகியதே...
உன் வடிகட்டிய தமிழால்
என் தாகம் தணிந்ததே...
அடி தமிழே...என் சகியே..

நேர்நேர் தேமா..
உந்தன் பெயர் சொல்லம்மா....
நிரைநேர் புளிமா...
அடி இந்த கூந்தல் போதுமா......

நேர்நிரை கருவிளம்....
தேடினேனே உந்தன் இல்லம்....
நிரைநிரை கூவிளம்....
அழைக்கிறதே உன்னை எந்தன் இல்லம்......

மழைதான் மழையும்தான் குறிஞ்சி...
காடுதான் காடும்தான் முல்லை.....
வயல்தான் வயலும்தான் மருதம்....
கடல்தான் கடலும்தான் நெய்தல்....
மணல்தான் மணலும்தான் பாலை......

இவை அனைத்தும் நீதானே.......கள்ளி........

பைந்தமிழோ நீ..........

No comments:

Post a Comment