பிறந்த கிராமம்.......பிறந்த வீடு.......
வீட்டை நோக்கி நடக்கின்றேன்.....
பத்தடி தூரத்திலேயே
பார்த்துவிட்டார் என்னை.....
"என்னப் பெத்தாரு.....சம்முகம்....
எப்பிடிய்யா இருக்க......"
என் நாற்பது வயதும்
நொடியில் உடைந்து
'நான்கில்' நின்றது
அவர் மடியில்..
உடலம் உதறியபடி..
உள்ளம் சிதறியபடி...
"ந.ந..நல்லா இருக்கேன்"
மென்று விழுங்குமுன்
"வெயில்ல நிக்காதப்பு இப்புடி
நிழல்ல வந்து உக்காரு..
வருசம் பலவாச்சேய்யா
எஞ்சாமி.....உன்னப்பார்த்து.....
பொண்டாட்டி.....புள்ளக்குட்டியெல்லாம்
நல்லா இருக்குகதாய்யா".
"ந..நல்லா இருக்காங்க".
"உன் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும்
கொள்ளிக்குடம் தூக்க வந்த..
அந்தா....இந்தா.....ன்னு
ஆச்சுதேய்யா பதினஞ்சு வருசம்....
ஒத்த உசுரா இருக்கேன்
ஒப்புக்காவது வந்துருக்கலாமுல".
"வெ..வேலை அதிகம்".
"அதச்சொல்லு சாமி...
சீமையில இருக்குற அப்பு
உனக்குச்
சோலி ரொம்ப அதிகந்தாப்பு- நீ
பொழைக்கிறச் சீமைப்
பேரக் கேட்டா
எடுபட்ட பயக
'நாசமா போ' னுறானுவ".
அது 'நியு சவுத் வேல்ஸ்'.
"வேணாஞ்சாமி.....எழவு...
வாயில வரல...
அத விடுய்யா....
நான் பார்க்கப் பொறந்த
பச்ச மண்ணு - ஒன்னப்
பார்க்குறப்பவே
மனசு குளிருதுய்யா...
எம்மேல ஒன்னுக்குப்போன சாமி
இன்னிக்கு
எம்புட்டுப் பெரிய ஆளா நிக்குற...
கண்ணு கலங்குது சாமி எனக்கு
கடந்துப்போன காலத்த நெனச்சா..
உன் அப்புச்சி
காட்டுன பாசந்தாய்யா
இரத்தமா ஓடுது
எனக்குள்ள..
உன் அப்புச்சி
கை ஓங்குறப்ப
உன் அப்பன் ஒளிஞ்சது
எங்கிட்டதான்..
உன் அப்பன்
கை ஓங்குறப்ப
நீ ஒளிஞ்சதும்
எங்கிட்டதான்..
அதெல்லாமொரு காலஞ்சாமி...
நம்ம குடும்பம் எப்புடி...
வயலென்ன...வரப்பென்ன...
வளஞ்சு ஆடும் கதிரென்ன...
ஆடென்ன...மாடென்ன....
ஆத்துமீன் குழம்பென்ன...
மாமன் என்ன...மச்சான் என்ன...
மஞ்சத்தண்ணி திருவிழா என்ன...
அங்காளி என்ன...பங்காளி என்ன...
அய்யனார் கோவில் பொங்கலென்ன...
போச்சு சாமி....
எல்லாம் போச்சு...
பாசநேசமெல்லாம்
பரதேசம் போயிடுச்சு.....
எல்லாம்
பணமாப் போயிடுச்சு...
தாயா...புள்ளையா....
பழகுனதெல்லாம்
நாயே...பேயே...ன்னு
வையுதுக....
ஒண்ணா.....மண்ணா...
திரிஞ்சதெல்லாம்
ஒன் தலையா....என் தலையா... ன்னு
உருளுதுக....
அத விடு சாமி....
காலம் எங்கயோ
போகுது சாமி - இந்தச்
சல்லவாரிகளுக்குச்
சாதி எதுக்குச் சாமி....
போன மாசமுய்யா...
கீழத்தெருப் பையன்
மேலத்தெருப் பொண்ண
விரும்புறான்னு
சண்டப் போட்டானுவயா
நாயாட்டம்....
ஓடிவந்த ரெண்டும்
எங்கிட்ட ஒளிஞ்சும்
காப்பாத்த முடியலய்யா...
கேணியில விழுந்து
அதுக
மூச்சு ரெண்டும் போச்சுதய்யா...
இந்தச்
சல்லிப் பயலுவச்
சாதிச் சண்டையில
பூத்த 'மல்லி'யெல்லாம்
பொசுங்குது சாமி..
நெனச்சாலே
என் ஈரக்குலயெல்லாம்
நடுங்குது சாமி".
.
.
.
.
.
நான் உறைந்துவிட்டேன்....
பூட்டிக்கொண்ட தொண்டைக்கு
சாவியைப்போட்டது நாக்கு....
.
.
.
.
.
மேலே ஒரு நாரை....
.
.
சூ......சூ.........
.
.
"அத வெரட்டாதப்பு.....
பாவம்...பொட்ட நாரை....
சோடி நாரைய்ய
குறவனுக்குக் கொடுத்துட்டு
தவிச்சு நிக்குது
குஞ்சுகளோடத் தனியா.....".
.
.
நான்
நிலைகுலைகிறேன்...
என் சிந்தை
'ச்சீ' என்றது என்னை....
.
.
" என்ன சாமி...
நான் எம்புட்டு நேரமாப் பேசுறேன்..
'நல்லா இருக்கியா,வேப்பா' ன்னு
வார்த்த ஒண்ணுக்கேக்கத்
தோணலையா உனக்கு
என்னப் பெத்தாரு".
.
.
.
.
அழுகின்றேனோ....
.
.
.
.
ட்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
வண்டிச்சத்தம்.....
.
.
.
.
சார்,,,,,,சார்,,,,,
எல்லாம் முடிஞ்சுடுச்சு.....
இந்தாங்க பணம்.......வீட்ட நாளைக்கு இடிச்சுக்குறேன்.......
கொஞ்சம் எந்திரிச்சுக்கிட்டீங்கன்னா.....
.
.
.
.
.
ஏலே,,,,கருப்பசாமி....
ரொம்ப வயசுடா இதுக்கு....
தூராப் பார்த்து
ஆழமாப் போடு, கோடாரிய.......
வீட்டை நோக்கி நடக்கின்றேன்.....
பத்தடி தூரத்திலேயே
பார்த்துவிட்டார் என்னை.....
"என்னப் பெத்தாரு.....சம்முகம்....
எப்பிடிய்யா இருக்க......"
என் நாற்பது வயதும்
நொடியில் உடைந்து
'நான்கில்' நின்றது
அவர் மடியில்..
உடலம் உதறியபடி..
உள்ளம் சிதறியபடி...
"ந.ந..நல்லா இருக்கேன்"
மென்று விழுங்குமுன்
"வெயில்ல நிக்காதப்பு இப்புடி
நிழல்ல வந்து உக்காரு..
வருசம் பலவாச்சேய்யா
எஞ்சாமி.....உன்னப்பார்த்து.....
பொண்டாட்டி.....புள்ளக்குட்டியெல்லாம்
நல்லா இருக்குகதாய்யா".
"ந..நல்லா இருக்காங்க".
"உன் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும்
கொள்ளிக்குடம் தூக்க வந்த..
அந்தா....இந்தா.....ன்னு
ஆச்சுதேய்யா பதினஞ்சு வருசம்....
ஒத்த உசுரா இருக்கேன்
ஒப்புக்காவது வந்துருக்கலாமுல".
"வெ..வேலை அதிகம்".
"அதச்சொல்லு சாமி...
சீமையில இருக்குற அப்பு
உனக்குச்
சோலி ரொம்ப அதிகந்தாப்பு- நீ
பொழைக்கிறச் சீமைப்
பேரக் கேட்டா
எடுபட்ட பயக
'நாசமா போ' னுறானுவ".
அது 'நியு சவுத் வேல்ஸ்'.
"வேணாஞ்சாமி.....எழவு...
வாயில வரல...
அத விடுய்யா....
நான் பார்க்கப் பொறந்த
பச்ச மண்ணு - ஒன்னப்
பார்க்குறப்பவே
மனசு குளிருதுய்யா...
எம்மேல ஒன்னுக்குப்போன சாமி
இன்னிக்கு
எம்புட்டுப் பெரிய ஆளா நிக்குற...
கண்ணு கலங்குது சாமி எனக்கு
கடந்துப்போன காலத்த நெனச்சா..
உன் அப்புச்சி
காட்டுன பாசந்தாய்யா
இரத்தமா ஓடுது
எனக்குள்ள..
உன் அப்புச்சி
கை ஓங்குறப்ப
உன் அப்பன் ஒளிஞ்சது
எங்கிட்டதான்..
உன் அப்பன்
கை ஓங்குறப்ப
நீ ஒளிஞ்சதும்
எங்கிட்டதான்..
அதெல்லாமொரு காலஞ்சாமி...
நம்ம குடும்பம் எப்புடி...
வயலென்ன...வரப்பென்ன...
வளஞ்சு ஆடும் கதிரென்ன...
ஆடென்ன...மாடென்ன....
ஆத்துமீன் குழம்பென்ன...
மாமன் என்ன...மச்சான் என்ன...
மஞ்சத்தண்ணி திருவிழா என்ன...
அங்காளி என்ன...பங்காளி என்ன...
அய்யனார் கோவில் பொங்கலென்ன...
போச்சு சாமி....
எல்லாம் போச்சு...
பாசநேசமெல்லாம்
பரதேசம் போயிடுச்சு.....
எல்லாம்
பணமாப் போயிடுச்சு...
தாயா...புள்ளையா....
பழகுனதெல்லாம்
நாயே...பேயே...ன்னு
வையுதுக....
ஒண்ணா.....மண்ணா...
திரிஞ்சதெல்லாம்
ஒன் தலையா....என் தலையா... ன்னு
உருளுதுக....
அத விடு சாமி....
காலம் எங்கயோ
போகுது சாமி - இந்தச்
சல்லவாரிகளுக்குச்
சாதி எதுக்குச் சாமி....
போன மாசமுய்யா...
கீழத்தெருப் பையன்
மேலத்தெருப் பொண்ண
விரும்புறான்னு
சண்டப் போட்டானுவயா
நாயாட்டம்....
ஓடிவந்த ரெண்டும்
எங்கிட்ட ஒளிஞ்சும்
காப்பாத்த முடியலய்யா...
கேணியில விழுந்து
அதுக
மூச்சு ரெண்டும் போச்சுதய்யா...
இந்தச்
சல்லிப் பயலுவச்
சாதிச் சண்டையில
பூத்த 'மல்லி'யெல்லாம்
பொசுங்குது சாமி..
நெனச்சாலே
என் ஈரக்குலயெல்லாம்
நடுங்குது சாமி".
.
.
.
.
.
நான் உறைந்துவிட்டேன்....
பூட்டிக்கொண்ட தொண்டைக்கு
சாவியைப்போட்டது நாக்கு....
.
.
.
.
.
மேலே ஒரு நாரை....
.
.
சூ......சூ.........
.
.
"அத வெரட்டாதப்பு.....
பாவம்...பொட்ட நாரை....
சோடி நாரைய்ய
குறவனுக்குக் கொடுத்துட்டு
தவிச்சு நிக்குது
குஞ்சுகளோடத் தனியா.....".
.
.
நான்
நிலைகுலைகிறேன்...
என் சிந்தை
'ச்சீ' என்றது என்னை....
.
.
" என்ன சாமி...
நான் எம்புட்டு நேரமாப் பேசுறேன்..
'நல்லா இருக்கியா,வேப்பா' ன்னு
வார்த்த ஒண்ணுக்கேக்கத்
தோணலையா உனக்கு
என்னப் பெத்தாரு".
.
.
.
.
அழுகின்றேனோ....
.
.
.
.
ட்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
வண்டிச்சத்தம்.....
.
.
.
.
சார்,,,,,,சார்,,,,,
எல்லாம் முடிஞ்சுடுச்சு.....
இந்தாங்க பணம்.......வீட்ட நாளைக்கு இடிச்சுக்குறேன்.......
கொஞ்சம் எந்திரிச்சுக்கிட்டீங்கன்னா.....
.
.
.
.
.
ஏலே,,,,கருப்பசாமி....
ரொம்ப வயசுடா இதுக்கு....
தூராப் பார்த்து
ஆழமாப் போடு, கோடாரிய.......

simply superb... neenga innum niraya eluthanum... all the best... tears in my eyes..:-)
ReplyDelete:) :) :)
ReplyDeleteரொம்ப நல்ல இருக்கு டா....
ReplyDeleteHei.. thanks da perz......... :)
ReplyDelete